மின்சக்தி அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டின் மின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகவும், உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன (Sulakshana Jayawardena) கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்நிலையில், வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்க முடிந்தால் நாளொன்றுக்கு 7 மில்லியன் மின் குமிழ்களை அணைக்க முடியும். வீட்டில் தேவையற்ற இடத்தில் ஒளிரும் மின் குமிழைதான் அனைக்க வேண்டும். மின்சாரத்தை சேமிப்பது என்பது குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய ஒன்றல்ல.
இதை ஒரு பழக்கமாக, நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று. இந்நிலையில், தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வது எமது பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.