மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்ட யாழ் மக்கள் பிரதிநிதிகள்!
கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் (Rosi Senanayaka) ஏற்பாட்டில், யாழ். மாவட்டத்தினை பிரதிபடுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
வடக்கு - தெற்கிற்கிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாகவே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ள நிலையில் இன்றைய தினம் (09-12-2022) நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட சென்ற யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் அணி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) உட்பட அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முண்டியடித்திருந்தனர்.
குறித்த விஜயத்தில் யாழ். மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், மானிப்பாய், சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.