கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகளுக்கான தீர்வு!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஏற்படும் நோய் அறிகுறியை கட்டுப்படுத்த விற்றமின் 'A' பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குணமடைந்த பின்னரும் நீண்ட கால வாசனை மற்றும் நாற்றம் இழப்பு நோய் இருக்கும். இதை போக்க ஐக்கிய இராச்சியத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஐக்கிய இராச்சியத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கு வழியாகப் பயன்படுத்தக்கூடிய விற்றமின் 'A' அடங்கிய கரைசலை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை ஈஸ்ட் என்க்லியா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.