வெட்டப்பட்ட மரத்தில் இருந்து சிந்தும் சிவப்பு ரத்தம்! அசந்துபோன விஞ்ஞானிகள்
ஆப்பிரிக்க நாட்டில் வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற ரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது.
இந்த மரத்தில் இருந்து வெளியேறும் திரவம், மனிதர்களின் ரத்தம் போலவே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுவதாக கூறப்படுகிறது.
மனிதர்கள் மீது வெட்டுக்காயம் வந்தால் ரத்தம் வெளியேறுவதைப் போல், இந்த அதிசய மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுகிறது.
இயற்கையின் அதிசயமாக இருக்கும் இந்த மரத்தை 'செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
உண்மையில், இந்த மரத்தின் பெயர் இரத்த மரம். இதன் அறிவியல் பெயர் தான் 'Cerocarpus Angolansis'. இந்த மரம் ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகிறது.
இது காணப்படும் நாடுகளில் மொசாம்பிக், நமீபியா, தன்சானியா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகள் அடங்கும். இருப்பினும், இப்போது அது ஏனைய இடங்களிலும் காணப்படுகிறது.
இந்த மரத்தை வெட்டியதும் அதிலிருந்து சிவப்பு நிற இரத்தம் வரும். உண்மையில் இது ரத்தம் அல்ல, ஆனால் தோற்றத்தில் மனித இரத்தம் போல தோற்றமளிக்கும் மரத்திலிருந்து வெளியேறும் ஒரு திரவம். மக்கள் அதை ரத்தம் என்றே கருதுகின்றனர்.
இந்த மரத்தின் உதவியுடன் மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், இதனுடன் இரத்தம் தொடர்பான நோய்களும் மரத்தின் மூலம் குணப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரிங்வோர்ம், கண் பிரச்சினைகள், வயிற்று நோய், மலேரியா அல்லது கடுமையான காயத்தை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.
இந்த மரத்தின் மதிப்பும் விலையும் உயர்ந்தது. மரத்தின் சராசரி நீளம் 12 முதல் 18 மீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.