தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும், 15 ஆம் திகதி ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் 17,18 ஆம் திகதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.