உறங்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று இரவு பொலிஸார் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ஹமீட் (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு தனது அறையில் தூங்கியவர், அவரது பிள்ளைகள் மதியம் வைகைக்கு திரும்புவதற்கு முன்னர் கதவை உடைத்து பார்த்தபோது இறந்து கிடந்தார். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவரது மரணம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.