அமைச்சுப் பதவியை இழக்கத் தயார்; சனத் அதிரடி அறிவிப்பு!
தனது அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே சனத் நிஷாந்த இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அயராது உழைத்த பல சிரேஷ்டர்கள் தற்போது பாராளுமன்றத்தில் பின் வரிசைகளில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டாலும், தவறாக நடத்தப்பட்டாலும் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவி தேவையில்லை எனவும் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியாகவும், குழுவாகவும் முன்னேற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.