ரம்புக்கனை விவகாரம்; பிரதமர் விடுத்த அறிவிப்பு!
ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து கண்டிப்பான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதில் முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Deeply distressed following the tragedy in Rambukkana. I have every confidence that a strict, impartial investigation will be carried out by @SL_PoliceMedia who've always served #lka with utmost honor. I urge protesters to engage in their civic right with equal respect & honour.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) April 20, 2022
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
அதோடு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.