நீண்ட நாட்களின் பின் ஒன்றாக கூடிய ராஜபக்க்ஷவினர்! மீண்டும் அப்பாவாகும் நாமல்
மக்களால் ஓரம் கட்டப்பட்ட ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்குப் பின் ஒரே இடத்தில் ஒன்றாகக் காணும் வாய்ப்புப் பலருக்குக் கிடைத்தது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் டி.பி. சாணக்கவின் திருமணத்தில் ராஜபக்க்ஷ குடும்பத்தினர் ஒன்றாக கலந்துகொண்டனர்.
அந்தத் திருமணத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என எல்லோரும் கலந்துகொண்டனர்.
இரண்டாவது தடவையாக அப்பாவாகும் நாமல்
அதேவெளை திருமண நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாகப் போய் ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
இதைக் கண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரைத் தேடித் சென்று அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார்.
அதேவேளை திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ச அவரது மனைவி – பிள்ளையுடன் நுழைந்தார். இதன்போது நாமலின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதேவேளை நாமல் தம்பதிக்கு ஏற்கனவே ஓர் மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.