ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு ஹோட்டல் முற்றுகை; 4 மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கொம்பனித்தெரு, லீலி வீதியில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனப் பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
குறித்த சொகுசு ஹோட்டலில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஹோட்டலில் துப்பாக்கிகள்....
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுவல, நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 55 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த சொகுசு ஹோட்டலில் சுமார் நான்கு மணி நேரம் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் , துப்பாக்கிகளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை
. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் முகாமையாளரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.