லிட்ரோ சிலிண்டரின் பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விக்கு பதில் என்ன?
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்பு தரத்தைக் குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சந்தையில் விநியோகிக்கப்படும் எங்களது சிலிண்டரின் தரத்தினைக் குறித்து லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன விளக்கமளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,
உலக தரத்திற்கு அமையவே தங்களது சிலிண்டர் சந்தையில் விநியோகிக்க படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து லிட்ரோ நிறுவனத்தின் இரசாயன செயற்பட்டு பொறியாளர் ஜயந்த பஸ்நாயக்க தனது கருத்தினையும் பதிவு செய்தார். கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அருகே உள்ள பிரபல உணவகமொன்றில் அண்மையில் எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது, ஆனால் குறித்த நிறுவனத்திற்கு தமது நிறுவனம் எரிவாயு விநியோகிப்பதில்லை என தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னர் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பிலும் விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார்.