தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 17 சிறுவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய வகையில் செயற்பட்ட 17 இளைஞர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் உள்ள மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய விளையாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதிக்கு சென்ற பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் க.ரமேஸ் தலைமையிலான சுகாதார குழுவினரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் குறித்த விளையாட்டு நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்தனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் முகக்கவசங்கள் அணியாத நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததை காணமுடிந்தது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலையில் சுகாதார பிரிவினர் இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்கள் பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாராவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் க.ரமேஸ் தெரிவித்தார்.லர் மேற்கொள்ளும் செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.