ரஷ்ய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதின் சாதனை; மூன்றாம் உலகப் போர் குறித்து ஆற்றிய உரையால் அதிர்ச்சி
ரஷ்யவில் அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ரஷிய வரலாற்றில் ஸ்டாலினுக்குப் பிறகு தொடர்ச்சியாக அதிபர் தேர்தலில் வெற்றி என்ற சாதனையை புதின் படைத்துள்ளார்.
200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சாதனை
200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு சாதனையை புதின் செய்துள்ளார். வெற்றியை பெற்றதை தொடர்ந்து புதின் ஆற்றிய முதல் உரையில்,
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷியாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை யாரும் விரும்பமாட்டார்கள்.
ஆனால் இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர்.
நவால்னியை விடுதலை செய்யவே விரும்பினேன்
அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நல்லது. சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன்.
ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷியக் கைதிகளுக்கு மாற்றாக நவால்னியை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அவரது மறைவு எதிர்பாராதது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது மிகப்பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிலவுகிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷிய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைச்சுவையாக உள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.