21 வயது யசீகரனை கொலை செய்த புதுக்குடியிருப்பு நண்பர்கள்!
புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் ஒன்றாக மதுபானம் அருந்திவிட்டு நண்பனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 5ம திகதி 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மதுபோதை
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தவேளை நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து ஏனைய மூன்று நண்பர்களால் இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார்.
அவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் கீறல் காயங்களும் காணப்பட்ட நிலையில் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணையினை தொடர்ந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் நேற்று 06 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.