சாந்தனின் பூதவுடலுக்கு பழ.நெடுமாறன் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்றையதினம்(29) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்றையதினம்(28) சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சாந்தனின் உடலுக்கு பலரும் அஞ்சலி
இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் மறைவுச் செய்தியை அறிந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோர் நேற்றையதினம் அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.