ஷானி அபேசேகரவின் பதவி உயர்வு விவகாரத்தில் திருப்பம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி இடைநீக்கம்
இந்த பதவி உயர்வானது 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இடம்பெற்ற பல சிக்கலான குற்றப் புலனாய்வுகளை வழிநடத்திய திறமையான அதிகாரியாக அறியப்படுகிறார்.
இலங்கை வந்த இளம் இந்திய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சம்பவம்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஷாணி அபேசேகர, சுமார் 11 மாதங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருப விதிகளின்படி மீண்டும் சேவையில் இணைந்துகொண்ட ஷாணி அபேசேகர, அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.