கம்பி நீட்டிய 30 வழக்குகளுடன் தொடர்புடைய கைதி; வலைவீசி தேடும் 5 குழு!
பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி நேற்று நீதிமன்ற அறையின் யன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
இவர் மீது போதைப்பொருள் தொடர்பான சுமார் 30 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தப்பியோடிய கைதியை கைது செய்ய 5 காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.