மசாலாபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு; திண்டாடும் இலங்கை மக்கள்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருகளின் விலைகள் பாரியளவில் அதுகரித்துள்ளதனால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தினம் தினம் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் உயரத்திற்கு செல்வதால் மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் விலைகளும் சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளன.
அந்தவக்லையில் கறுவா, மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஏற்றுமதி மட்டத்தில் உள்ள ஒரு கிலோ இலவங்கப்பட்டையின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு கிலோ மிளகு 1300 ரூபாவாகவும், கராம்பு கிலோ ஒன்றின் விலை 2400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, அரிசி, சிவப்பு பருப்பு, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.