செய்தி வாசிக்கும் போது நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்! நடந்தது என்ன?
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போரை நடத்தி வருகின்றது. இதனால் ஆயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனின் உள்ள மக்கள் அண்டை நாடுகளிடம் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்கள் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கவுரவப்படுத்தினார்.
Japon TV sunucusu Yumiko Matsuo, Mariupol demir-çelik fabrikasının sığınağında saklanan çocukların haberi ile Putin’in Bucha katliamı sorumlusu olduğu iddia edilen tugaya ödülünün haberini aktarırken göz yaşlarına hakim olamıyor, izleyicilerden özür dileyerek sunumunu tamamlıyor. pic.twitter.com/haj23nKwZR
— Ahmet Yeşiltepe (@ahmetyesiltepe) April 22, 2022
இது தொடர்பான செய்தி ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது.
அப்போது செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலேயே தடுமாறி அழுதார். பின்னர் நிதானமடைந்த அவர், சிறிது நேரத்திற்கு பின் செய்தி வாசிப்பை தொடங்கினர்.
இந்த காணொளி சமூக வலைதளங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த செய்தி வாசிப்பாளரைப் போலவே தாங்களும் அழுததாக கருத்து பதிவிட்டுள்ளனர்.
மக்களின் மனதில் இந்த போர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.