வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான ஜனாதிபதியின் நிலைப்பாடு
இலங்கைக்கு மின்சார வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை,வாகனங்களுக்கே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்பத்திலான கேபிள் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஏன் இறக்குமதி செய்ய இயலாது என கேள்வியையும் ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.