இலங்கைக்கு வந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த அவரை (Masato Kanda) நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் இங்கு வருகை தந்துள்ளதாகவும்
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் திரட்டுவதன் மூலம் இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இந்த முன்னுரிமை விடயங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் மசாடோ காண்டா (Masato Kanda) பதிவிட்டுள்ளார்.
I have arrived in Colombo at a critical moment as Sri Lanka transitions from crisis response toward recovery and sustainable growth. I was warmly received at the airport by Sri Lanka’s Minister of Labor and Deputy Minister of Finance, Anil Jayantha Fernando.
— Masato Kanda (@ADBPresident) March 23, 2026
This visit is an… pic.twitter.com/xIta7lTqqx