ஜனாதிபதி ரணிலுக்கு பகிரங்க சவால் விடுத்த சஜித்!
ஜனாதிபதி தேர்தலை முடிந்தால் இந்த வருடத்திற்குள் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு Ranil Wickremesinghe சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக ஆதரிக்கும் என்றும் சஜித் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
தேர்தலில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், “உதாவக அரமுன” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனி ஆசனத்தில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டதில் ஆச்சரியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியின் கதி என்னவென்பதை தாம் நன்கு அறிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்திருந்தார்.