மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை வழமைக்கு
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை தற்போது வழமை நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடை தொடர்பில் 7,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அவற்றில் 4,684 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது வீழ்ந்தமையினால் அண்மையில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
மின்சார விநியோகத் தடை தொடர்பான தகவல்களை 1987 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.