எரிக் சொல்ஹெய்ம் இற்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய பதவி!
நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்தடைந்த எரிக் சொல்ஹெய்ம் நேற்று ( 11) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
இதன் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வெளிவிவகார ஆலோசகராக கடந்த 2000ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.
Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan ?? President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership!
— Erik Solheim (@ErikSolheim) October 12, 2022
Proud to be appointed his International Climate Adviser together with @MohamedNasheed @RW_UNP @SriLankaTweet pic.twitter.com/1UnhQOCA4j
இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.