தமிழர் பகுதியில் குளத்தில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!
திருகோணமலை உள்ள சம்பூர் - தொடுவான் குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (29-11-2023) பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சடலமானது பிரதேச மக்களின் தேடுதல் நடவடிக்கையின்போது பின்னர் மாலை 5.30 மணியளவில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவனும், மனைவியும் வயலை பார்த்துவிட்டு வரும் வழியில் கணவன் குளிப்பதற்காக குளத்தில் இறங்கியபோதே முதலை அவரை திடிரென பாய்ந்நு இழுத்துத் சென்றுள்ளது.
குளத்தின் கரையிலிருந்த மனைவி கணவனை காப்பாற்ற முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை.
இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் தோப்பூர் - பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி நிதுர்சன் வயது 20 தெரியவருகின்றது.
சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.