15,000 ரூபா இலஞ்சம்; தமிழர் பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ,கான்ஸ்டபிள் கைது
யாழ் மல்லாக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள்
ஜேசிபி வகை இயந்திரத்தை செலுத்திய சாரதிக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்ப்பதற்காக முதலில் 25,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதியிடமிருந்து 12,500 ரூபாவை பெற்றுக்கொண்டு மீதி தொகையை செலுத்தும் வரை சாரதியின் தேசிய அடையாள அட்டையை தம் வசம் வைத்திருந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.