பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்
பாணந்துறையில் கடந்த 29ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச் சேர்ந்த ராஜீவ் சூரஜ் சாமர என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரே தேடப்பட்டு வருகிறார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டறிய பொதுமக்களிடமிருந்து தகவல்களைக் கோருயுள்ளனர்.
அதன்படி, குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தால், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரி மதுஷன் – 0717409070 அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவு பாணந்துறை 038-3341467 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.