புதையல் தோண்டிய 11 பேரை கைது செய்த பொலிஸார்
அம்பாறை பகுதியில் புதையல் தோண்டிய 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நபர்களையும் கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அலவாங்கு மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.