பொலிஸ் CID மீது சரமாரி தாக்குதல் ; சந்தேக நபர்கள் அதிரடி கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்ததுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தன்று, இனந்தெரியாத நபர்கள் சிலர் களுத்துறை தெற்கு, வேட்டு மங்கட சந்தி பிரதேசத்தில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிளை பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் களுத்துறை, மஹ ஹுனடியன்கல பிரதேசத்தில் வசிக்கும் 35 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.