திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு

Sri Lanka Police Trincomalee Buddhism NPP Government
By Sulokshi Nov 20, 2025 05:45 AM GMT
Report

  சம்புத்த ஜயந்தி விகாரை விடயத்தில் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகளே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்கள் என என்று ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

திருகோணமலையில்  நேற்று இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது தேரர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு | Police Caused Controversy Over Trincomalee Buddha

இனவாத செயற்பாடுகளோ, மதவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை 

1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கவிருந்த திருகோணமலையின் முதலாவது ஸ்ரீபோதிவர்தன அறநெறி பாடசாலைக்குரிய கட்டடப் பகுதியொன்று கடந்த 2004 ஆம் ஆண்டு சேதத்துக்குள்ளானது.

A/L விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்; யாழ் பிரபல பாடசாலையில் சம்பவம்

A/L விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்; யாழ் பிரபல பாடசாலையில் சம்பவம்

அந்தக் கட்டடத்தை மீள நிர்மாணித்து திருமலை நகரிலுள்ள பிள்ளைகளுக்கு அறநெறிக் கல்வியை வழங்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்கி கொடுக்கவே முயற்சித்தோம்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அன்றிரவு பொலிஸ் அதிகாரிகள் வந்து எங்களின் விகாரையை சுற்றிவளைத்து, அவசியமின்றி விகாரைக்குள் நுழைந்து, பிக்குகளை தாக்கி, அங்கிருந்த புத்தர் சிலையையும் கடத்திச் சென்றார்கள்.

திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு | Police Caused Controversy Over Trincomalee Buddha

அதன்போது தாக்குதலுக்குள்ளான நானும் இன்னுமொரு தேரரும் மூன்றுநாள் சிகிச்சையின் பின்னரே இன்றே திரும்பி வந்தோம்.

1951 ஆம் ஆண்டு முதல் வரலாறுள்ள இந்த விகாரையில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளோ, இனவாத செயற்பாடுகளோ, மதவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை.

திருகோணமலை பொலிஸ் அதிகாரிகளே இந்த விடயத்தில் தலையிட்டார்கள். திடீரென ஏற்பட்ட மர்மத்தின் பின்னணியிலேயே இப்படியொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று எண்ணுகிறோம்.

திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு | Police Caused Controversy Over Trincomalee Buddha

 தொடர்ச்சியாக எங்களுக்கு அச்சுறுத்தல்

இதுதொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுப்போம். பகல் நேரத்தில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யவே நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனாலும், கரையோரப் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அங்கிருந்த சகல பொலிஸ் அதிகாரிகளும் தொடர்ச்சியாக எங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் வீட்டில் மற்றுமொரு துயரம்; நிர்க்கதியில் பிள்ளைகள்

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் வீட்டில் மற்றுமொரு துயரம்; நிர்க்கதியில் பிள்ளைகள்

கைதுசெய்வதாக அச்சுறுத்தினார்கள். அதற்கான சாட்சி வீடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன. இந்த பிரச்சினையுடனேயே சிலை பிரதிஷ்டை செய்யும் பணிகள் காலதாமதமாகின.

அவசியமின்றி நாங்கள் எதனையும் செய்யவில்லை. விகாரைக்கும் அறநெறிக்கும் அனுமதியுடைய, சகலரும் அறிந்த இடம். அதன் அடிப்படையிலேயே இந்த அறநெறியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தோம். மகேந்தரவங்ச தேரர் உயிரிழந்ததை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டேன்.

திருகோணமலை புத்தரை சர்ச்சையாக்கியது பொலிஸாரே; குடை பிடித்ததை மறந்து தேரர் குற்றச்சாட்டு | Police Caused Controversy Over Trincomalee Buddha

அன்றிலிருந்து இளைஞர் பிக்குகள் சங்கத்தின் இணக்கத்துடனேயே விற்பனை நிலையத்தை நிர்மாணித்தோம். விகாரைக்கு உதவி வழங்க யாரும் இல்லாததால் அதனூடாக அறநெறி பாடசாலையை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்தோம்.

ஆனாலும் எங்களுக்கு சேறுபூசுகிறார்கள். விகாரையின் தர்ம மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இணக்கப்பாட்டுக்கமைய வர்த்தக நிலையத்தை மீண்டும் நீக்கவும் எதிர்பார்க்கிறோம். இந்த இடத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு சகல மக்களிடமும் கோருகிறோம் என்றும் விகாராதிபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

தெற்கு கடற்கரையில் போதைப்பொருளுடன் சிக்கிய பல நாள் மீன்பிடி படகு

தெற்கு கடற்கரையில் போதைப்பொருளுடன் சிக்கிய பல நாள் மீன்பிடி படகு

அதேவேளை  இரவில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அடுத்தநாள் காலை  கடும் பொலிஸ் பாதுகாப்புடன், , பொலிஸார்  குடைபிடிக்க மீண்டும் எடுக்கப்பட்ட இடத்தில் பிரதிக்ஷ்டை  செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US