ஓய்வூதியத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம்
நாட்டில் ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் தற்போது விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியான அறிக்கையில் கூறியதாவது,
கொரோனா நெருக்கடி காரணமாக தற்போது நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் ஓய்வூதியத்தை விரிவுபடுத்தி வழங்குவதற்கான திட்டம் அமுலுக்கு வரலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.