பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுருதி - பவானியை கடுமையாக கண்டித்த கமல்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன்5. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவார். இதன்போது கடந்த வாரத்தில் நடத்த தவறுகளை சுட்டிக்காட்டும் கமல், காயின் டாஸ்கில் இந்த வாரம் தாமரையின் காயினை சுருதி எடுத்ததை பற்றி கமல் பேசியுள்ளார்.
தாமரை ஆடை மாற்றும் அறையில் இருந்தபோது, அங்கு நுழைந்த பவானி மற்றும் சுருதி இருவரும் தாமரைக்கு தெரியாமல் காயினை எடுத்துவிட்டனர். ஆடை மாற்றும் அறையில் அப்படி செய்தது நல்ல பண்புக்கு அழகில்லை.
இதை கமல்ஹாசன் அவர் பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அன்பு, பாசம் மட்டுமல்லாமல் பண்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று சுருதி மற்றும் பாவனியை கண்டித்துள்ளார்.
மேலும் தாமரையிடம் காயினை எடுத்தபோது சுருதி மற்றும் பாவனியை நல்வழிப்படுத்திய ராஜுவையும் கமல் பாராட்டினார். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் விதிகளை பின்பற்றுவது போல நெறிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம் என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் எடுத்துரைத்தார்.
இதேவேளை தாமரையிடம் சுருதி மற்றும் பாவனி இருவரும் மன்னிப்பு கேட்ட போது அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பிறகு தாமரையும் கமல் அவருடைய தவறை மட்டுமல்ல குற்றத்தையும் மன்னிப்பதே சிறந்த பண்பு என்றும் அறிவுறுத்தினார்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சி முழுவதும் அறிவுரைகளை பக்கம் பக்கமாக கூறி, பாதி நேரம் கழிந்து நிகழ்ச்சி விறுவிறுப்புடனும் காரசார பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கொண்டு சென்றார்.