ஆடையின்றி சென்ற நபர்; விற்பனை நிலையத்தில் செய்த மோசடி
குருணாகல், உஹுமிய பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த சில்லறை விற்பனை நிலையமொன்றுக்குள் ஆடையின்றி நுழைந்த நபரொருவர் அங்குள்ள பொருட்கள் சிலவற்றை திருடிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் அது குறித்த காட்சிகள் கடையில் இருந்த சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இதன்போது சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வீரம்புகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.