நாட்டில் மதுபானசாலை ஆரம்பிக்கும் நபருக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கையில் எந்தவொரு நபரும் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நாட்டில் இதுவரையில் மதுபானசாலை ஒன்றை திறப்பதற்கு அத்தகைய அடிப்படைக் கட்டணம் அறவிடப்படவில்லை என்றும், மிகவும் சட்டபூர்வமான முறையில் மதுவரி உரிமம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், B4 உரிமத்திற்கு அதிக தேவை இருப்பதால், அந்த உரிமம் வழங்குவதற்கு அடிப்படைக் கட்டணமாக 1 கோடி ரூபாவை வைப்பிலிடவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையுடன் இணைந்து உரிமம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டின் பொது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.