மின்வெட்டால் மக்கள் அவதி; பகலிலும் எரியும் வீதி விளக்குகள்!
நாட்டில் மின்சார நெருக்கடியால் தினமும் நாடு முழுவதும் 5 மணித்தியாலத்துக்கு அதிகமான நேரங்கள் மின்துண்டிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் கண்டி- டீ.எஸ். சேனநாயக்க வீதியில் பகல் வேளைகளிலும் வீதி விளக்குகள் எரிந்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கண்டி நகர ஆணையாளர் இசான் விஜேதிலகவிடம் வினவிய போது, குறித்த வீதியின் மின் விளக்குகளை நிர்வகிப்பது மின்சார சபையினர் என தெரிவித்தாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் , இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையினரை தெ ளிவுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் , இவ்வாறு வீதிவிளக்குகளை பகலில் எரியவிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.