கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டிய யாழ்.மக்கள்!
யாழில் வழங்கப்பட்டு வருகின்ற சினோபார்ம் மூன்றாம் கட்டத்துக்கான முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்களில் வியாழக்கிழமை 18,039 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
சங்கானை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 1748, சாவகச்சேரி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 716, யாழ்ப்பாண பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 2636, காரைநகர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 143, கரவெட்டி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு1730,
ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 100, கோப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 2364, மருதங்கேணி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 568,
நல்லூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு1980, பருத்தித்துறையை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவு 1112, சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 1776,
தெல்லிப்பளை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 948,
உடுவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 2218 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளநிலையில் இன்றைய தினமும் தடுப்பூசி வழங்கல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.