தமிழர் பகுதியில் இரவு பரபரப்பு சம்பவம்: இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!
திருகோணமலையில் உள்ள வீதியொன்றில் இலங்கை போக்குவர்த்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் நபரொருவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (01-01-2024) திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூதூர் டிப்போவிற்கு சொந்தமான பேருந்து உட்துறைமுக வீதிக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டவருடன் மோதியதாகவும், இதனை அடுத்து ஆவேசத்தில் சிலர் பேருந்தை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.
இந்த விபத்தில் திருகோணமலை சீ.வீ.ரோட்- கஸ்தூரி நகரில் வசித்து வரும் 44 வயதான கருப்பையா கருணாநிதி என்பவரே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை விபத்தினையடுத்து பேருந்தை தாக்கிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.