மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
பம்பலப்பிட்டி, காலி வீதி, டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்கள் நேற்றையதினம் (12-05-2024) மஹரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் மற்றும் சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும், பொழுது போக்கிற்காக அஜாக்கிரதையாகவும் அபாயகரமாகவும் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக குறித்த மோட்டார் சைக்கிள்கள் சாரதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.