தேரரால் முடங்கிய பட்டிப்பளை பிரதேச செயலக செயல்பாடுகள்!
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்ட மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்காரணமாக இன்று பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்க அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்தே தேரர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அதோடு பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவும் கூறப்படுகின்றது.

