கொளுந்து விட்டு எரிந்த பயணிகள் விமானம்: 19 பேரின் நிலை? அதிர்ச்சி காணொளி
பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் அமெரிக்காவின் Waller County-யில் சுமார் 19 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, இன்று காலை மூன்று விமான ஊழியர்களுடன் MD-80 வகை கொண்ட சிறிய வகை விமானம் Houston Executive விமான நிலையத்தில் இருந்து சுமார் 19 பேர் கொண்ட பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது மணி துளிகளில், விமான நிலையத்தின் வேலியை உடைத்து அங்கே தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
There were 21 people on the plane when it crashed here in Waller County. No reports of serious injuries. @khouron is LIVE now with updates. @DavidGonzKHOU is on the way to the scene. https://t.co/wxuNi3nWRV pic.twitter.com/v4KgQpABGs
— KHOU 11 News Houston (@KHOU) October 19, 2021
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் அதிர்ஷ்டவசமாக, உயிரிழக்கவில்லை எனவும் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து Waller County நீதிபதி Trey Duhon தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பது, Waller County அலுவலகம் அவசர மேலாண்மை மற்றும் WCSO இன்று அதிகாலை Houston Executive விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமான விபத்தில் சிக்கியிருப்பதை அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
MD-80-வகை கொண்ட அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது, அது சரியான உயரத்தை எட்டவில்லை, இதனால் அங்கிருந்த சாலையின் குறுக்கே அசுரவேகத்தில் சென்று அருகில் இருந்த வயலில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
குறித்த விமானத்தில் 19 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாகவும், ஒரு பயணிக்கு மட்டும் முதுகுபகுதியில் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது தான் தற்போது தங்களுக்கு கிடைத்துள்ள தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.