பணம் தர மறுத்த பேருந்து நடத்துனரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பயணி!
பாதுக்க, ஹங்வெல்ல பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் பேருந்து நடத்துனரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபரான பயணி பாதுக்க, துன்னான பகுதியில் வைத்து பேருந்து ஒன்றில் ஏறியுள்ள நிலையில் பஸ் நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
பேருந்து நடத்துனர் பணத்தைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபரான பயணி, பேருந்து நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.