காதலிற்கு எதிர்ப்பு; ஏணியால் மனைவியை ஏற்றி இறக்கும் துர்ப்பாக்கிய நிலையில் இளைஞன்!
அம்பாறை- உகன பிரதேசத்தில் காதல் திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் வீட்டின் கதவுகளை பூட்டி வைத்துள்ளதால் , தம்மால் வீட்டுக்குள் நுழைய முடியாதுள்ளதாக இளைஞன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதன்காரணமாக ஏணியின் மூலமே மனைவியை வீட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டியுள்ளதாக இளைஞன் தெரிவித்துள்ளார். பதுளையை சேர்ந்த யுவதியுடன் ஏற்பட்ட பேஸ்புக் காதலையடுத்து, கடந்த மாதம் இளைஞன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை மீறி குறித்த யுவதியை கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் திருமணம் முடிந்து தம்பதியினர் வீடு திரும்பியபோது, வீட்டின் சகல கதவுகளும் பூட்டப்பட்டு தந்தையும், சகோதரிகளும் உள்ளேயிருந்து விட்டனர்.
நானும் என்னுடைய மனைவியும் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கின்றோம் என்றும், அங்குச் செல்வதற்கு வீட்டுக்கு வெளியே படிகள் இல்லை என்பதனால் நான், எனது மனைவியும் வெளியே சென்றுவர வசதியாக வீட்டின் கதவுகளை திறந்து வைக்க ஏற்பாடு செய்யுமாறும் இளைஞன் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.