மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதிகள் திறப்பு
விபத்து காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட இடைமாற்றுப் பாதை மற்றும் களனிகம இடைமாற்றுப் பாதை ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளுக்கு ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரத்தூள் ஏற்றப்பட்ட ரிப்பர் வாகனம் ஒன்று கவிழ்ந்து நேற்று புதன்கிழமை இரவு (15) விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தால் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பாதை தடைப்பட்டதுடன் அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து குறித்த பாதை சீர் செய்த பின்னர் இன்று வியாழக்கிழமை (16) காலை திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.