தேங்காய் பறிக்க வந்தவர் தங்க நகைகளுடன் ஓட்டம்!
மட்டக்களப்பு - ஞானசூரியம் சதுக்கப்பகுதில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகையை கொள்ளையிட்டு சென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் தொழிலாக கொண்ட சந்தேக நபர், வீடு ஒன்றில் கடந்த 12ம் திகதி சென்று தேங்காய் பறித்து தரவா என கேட்டடு அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி தோங்காய் பறித்துள்ளார்.
வீட்டின் தாயார் குளியலறைக்கு சென்று திரும்பிய நிலையில் தேங்காய் பறிக்க வந்தவர் மாயமாகியுள்ளார். அத்துடன் வீட்டினுள் இருந்த சிறுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் தங்கசங்கிலி அரை பவுண் கொண்ட இரு காப்புக்களையும் சந்தாக நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, கல்லடி வேலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கைதான சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.