மின்னல் தாக்கத்திற்கிலக்காகி ஒருவர் பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
Ampara
Sri Lanka
Eastern Province
By Kirushanthi
அம்பாறை - ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் அவ்விடத்திலேயே மரணமடைந்த நிலையில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (07.10.2023) பிற்பகல் 2 மணியவில் இடம்பெற்றது.
இதன்போது ஒலுவில் வெளிச்சம் வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.
ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US