கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி ; அதிவேக வீதியில் சம்பவம்
தெற்கு அதிவேக வீதியில் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5.5 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கார், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு அருகில் சாரதி நின்றுக்கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர் தும்மோதரை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய காரின் சாரதி மற்றும் காரில் பயணித்த இருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வாகன விபத்துக் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.