இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று 100 வீதமாக அதிகரிக்குமா? மக்கள் அச்சம்
நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வக அறிக்கைகள் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அவர்கள்,எதிர்காலத்தில் இது 100 வீதமாக அதிகரிக்கச் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக அதிகரிக்கும் என தவகல்கள் வெளியாகியுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தால், ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே இதுவரை கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பெறாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் உபுல் ரோஹன கூறினார்