சிவிலியனை உதைத்த அதிகாரி: விசாரணையைத் தொடங்கிய இராணுவம்!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இலங்கை இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாச தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், "எதிர்க்காத ஒரு நபர் அதிகாரி ஒருவரால் வன்முறையில் தாக்கப்பட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
An unresisting man was assaulted by an officer violently, and what’s worse,the other officers just watch.There is no rule of law.Either the officer’s actions will be justified or he will be suspended for a while but the violence,and the aggression continue on supported at the top https://t.co/lJ229Vm59H
— Sajith Premadasa (@sajithpremadasa) July 4, 2022
சட்டத்தின் ஆட்சி இல்லை என்று சுட்டிக்காட்டிய எம்.பி பிரேமதாச, மேல்மட்டத்தில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகிறது என்றும் கூறினார்.