மட்டக்களப்பில் லஞ்சம் பெறுகையில் சிக்கிய அதிகாரி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணி புரியும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணிபுரியும் வருமானவரி பரிசோதகர் ஒருவரை தமது பிரதேச சபையின் முன்பாக வைத்து கைது செய்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு கொண்டு சென்றதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தெரிவித்தார்.
காரில் வந்த ஒருவரிடம் சந்தேக நபரான பிரதேச சபையில் பணி புரியும் நபர் இலஞ்சம் பெற்ற நிலையில் அதனை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பிரதிதிதிகள் அவதானித்து, இலஞ்சம் கொடுத்தவரையும், வாங்கியவரையும் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.