கொழும்பு மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர் NPP ஆள் ?
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் ஒரு மாணவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணித ஆசிரியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
அவர் ஒரு NPP ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அடக்க முயற்சிக்கிறதா என்று அவர்கள் சந்தேகிப்பதாக அவர் கூறினார்.
ஒருவர் இறந்த பிறகு JMO அறிக்கை வெளியிடப்படும்போது, JMO அறிக்கையில் சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக எப்படிக் குறிப்பிடப்பட்டது ஏன் என சபையில் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுபினார்.
அதோடு "இறந்த நபரின் மனநிலை குறித்த அறிக்கை எவ்வாறு வெளியிடப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை," என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.